search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாக்காளர் பட்டியல் வெளியீடு"

    • தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்றத் தொகுதிகளில் 878 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளது.
    • வரைவு வாக்கு ச்சாவடி பட்டியல் வெளி யிடப்பட்ட நாளிலிருந்து ஏழு நாட்களுக்குள் இது தொடர்பான ஆட்சே பனைகள், ெதரிவிக்கலாம்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு, பென்னாகரம், தருமபுரி, பாப்பி ரெட்டிப்பட்டி, அரூர் ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதி நிதிகள் முன்னிலையில் மாவட்ட கலெக்டர் சாந்தி இன்று வெளியிட்டார்.

    இதன்படி தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்றத் தொகுதிகளில் 878 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளது. மேலும் வரைவு வாக்கு ச்சாவடி பட்டியல் வெளி யிடப்பட்ட நாளிலிருந்து ஏழு நாட்களுக்குள் இது தொடர்பான ஆட்சே பனைகள், எதிர்ப்புகள் ஏதேனும் இருப்பின் சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர் அல்லது உதவி வாக்காளர் பதிவு அலுவலகங்களில் தங்களது கோரிக்கையை விண்ண ப்பம் வாயிலாக அளிக்க லாம்.

    வாக்காளர்கள் எளிதாக வந்து வாக்களிக்கும் சூழலை ஏற்படுத்தும் வகையில் இரண்டு கிலோ மீட்டருக்கு மேல் பயணிக்க வேண்டிய வாக்காளர்களை அவர்களுக்கு அருகிலேயே வாக்குச் சாவடி அமைப்ப தற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

    ஒரு வாக்கு சாவடியில் மொத்தம் 1500-க்கும் மிகுதியாக வாக்காளர்களின் எண்ணிக்கை இருந்தால் புதிய வாக்குச்சாவடி அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    சட்டமன்ற வாரியாக வரப்பெறும் கோரிக்கைகள் தொகுக்கப்பட்டு, இறுதியாக வாக்கு சாவடி களில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் கலந்து ஆலோசிக்கப்பட்டு, பின்னர் மாற்றங்கள் இறுதி செய்யப்பட்டு தலைமை தேர்தல் அலுவலருக்கு அனுப்பப்படும் என்று மாவட்ட கலெக்டர் சாந்தி தெரிவித்தார்.

    • இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான தீபக் ஜேக்கப் வெளியிட்டார்.
    • தயார் செய்யப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் உள்ளாட்சி அமைப்பு அலுவலகங்களில் வெளியிடப்பட்டுள்ளது என்றார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக முகாம் அலுவலகத்தில், மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர் தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான தீபக் ஜேக்கப் வெளியிட்டார்.

    இது குறித்து அவர் கூறுகையில், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய செயலாளர் தெரிவித்துள்ள கால அட்டவணையின்படி, மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர் தேர்தலுக்கு, ஊரக பகுதியில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், நகர்ப்புற பகுதியில் மாநகாட்சி வார்டு உறுப்பினர்கள், நகராட்சி வார்டு உறுப்பினர்கள் மற்றும் பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் கொண்டு தயார் செய்யப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் உள்ளாட்சி அமைப்பு அலுவலகங்களில் வெளியிடப்பட்டுள்ளது என்றார்.

    இந்த நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) ராஜகோபால், வட்டார வளர்ச்சி அலுவலர் அன்சர்பாஷா உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

    • இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு
    • அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் நடந்தது

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் பெயர் சேர்த்தல் நீக்கல் முகவரி மாற்றம் உள்ளிட்டவைகளுக்காக கடந்த சில மாதங்களாக அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம் நடந்தது.

    முகாமில் ஏராளமான இளம் வாக்காளர்கள் ஆர்வத்துடன் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க மனு அளித்தனர். இதேபோல் பெயர் நீக்கல் முகவரி மாற்றத்திற்கும் மனு அளித்து இருந்தனர்.

    பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது வாக்குச்சாவடி அலுவலர்கள் முதற்கட்ட விசாரணை நடத்தினர். இதையடுத்து வாக்காளர் பதிவு அலுவலர் விசாரணை முடித்து வாக்காளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டது. இைதயடுத்து வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் இறுதி வாக்காளர் பட்டியலை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் இன்று காலை வெளியிட்டார். வெளியி டப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் அந்தந்த வாக்கு சாவடி மையங்களில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட உள்ளது.

    மனு அளித்த பொதுமக்கள் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களை சரி பார்த்துக் கொள்ளலாம் என கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்தார்.

    அதன்படி வேலூர் சட்டமன்ற தொகுதியில் 1,22,140 ஆண் வாக்காளர்களும், 1,31, 821 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர்கள் 41 பேர் என 2,54,002 பேர் உள்ளனர். காட்பாடி சட்டமன்ற தொகுதியில் 1,18, 636 ஆண் வாக்காளர்களும், 1,27,261 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர் 35 என 2,45, 932 பேர் உள்ளனர்.

    அணைக்கட்டு தொகுதியில் 1,24,055 ஆண் வாக்காளர்களும், 1,31,774 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர்கள் 30 பேர் என 2,55, 859 பேர் உள்ளனர். கே. வி.குப்பம் தொகுதியில் 1,11,357 ஆண்களும், 1,16, 268 பெண்களும், மூன்றாம் பாலினத்தவர் 8 பேர் என 2,27,638 பேர் வாக்காளர்களாக உள்ளனர்.

    குடியாத்தம் சட்டமன்ற தொகுதியில் 1,40,642 ஆண்களும், 1,50,355 பெண்களும், மூன்றாம் பாலினத்தவர்கள் 43 பேர் என 2,91,040 வாக்காளர்கள் உள்ளனர்.

    வேலூர் மாவட்டத்தில் ஆண் வாக்காளர்கள் 6,16,830, பெண் வாக்காளர்கள் 6,57,479, மூன்றாம் பாலினத்தவர்கள் 157 பேர் என மொத்தம் 12,74,466 வாக்காளர்கள் உள்ளனர். ஆண் வாக்காளர்களை விட 41 ஆயிரம் பெண் வாக்காளர்கள் அதிக அளவில் உள்ளனர்.

    • செப்டம்பர் மாதம் 1ம் தேதிகளில் 18 வயதினை பூர்த்தி செய்பவர்கள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.
    • வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைக்காத வாக்காளர்களும் இணைத்துக் கொள்ளலாம்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டத் தில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்குமுறைத் திருத்தம் -2023 பணி மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக நேற்று கலெக்டர் அலுவலகத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலர்(பொறுப்பு) ராஜேஸ்வரி, அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார். அதை கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் சதீஸ்குமார் பெற்றுக்கொண்டார்.

    தொடர்ந்து, மாவட்ட தேர்தல் அலுவலர் கூறியதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை(தனி), பர்கூர், கிருஷ்ணகிரி, வேப்பனஹள்ளி, ஓசூர், தளி உட்பட 6 தொகுதிகளில் 8 லட்சத்து 6 ஆயிரத்து 837 ஆண் வாக்காளர்களும், 7 லட்சத்து 99 ஆயிரத்து 28 பெண் வாக்காளர்களும், 291 இதரர் உட்பட 16 லட்சத்து 6 ஆயிரத்து 156 வாக்காளர்கள் உள்ளனர். கடந்த ஜனவரி 5-ம் தேதி வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலுக்கு பின்னர், தொடர் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்த்தல், இறந்த, வெளியூர் சென்ற நபர்கள் நீக்கம் செய்ததின் அடிப்படையில் புதியதாக 12 ஆயிரத்து 19 வாக்காளர்கள் நாளது வரை பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    தற்போது நடைபெற உள்ள சிறப்பு சுருக்கமுறைத் திருத்தத்தின்படி வருகிற ஜனவரி 1ம் தேதியன்று 18 வயது பூர்த்தியடையும் அனைத்து இளம் வாக்காளர்களும் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களை சேர்த்திட தகுதியுடைய வராகின்றனர்.

    இதற்காக, மாவட்டத்தில் செயல்படும் அனைத்து கல்லூரிகளிலும் வளாக தூதர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டு, இளம் வாக்காளர்கள் அடையாளம் கண்டு வாக்காளர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இதே போல், தேர்தல் ஆணையத்தின் புதிய விதிகளின்படி, வருகிற 2023-ம் ஆண்டு ஏப்ரல், ஜூலை மற்றும் செப்டம்பர் மாதம் 1ம் தேதிகளில் 18 வயதினை பூர்த்தி செய்பவர்கள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். அவர்கள்து விண்ணப்பங்கள் தற்காலிக மாக ஏற்றுக் கொள்ளப்பட்டு, உரிய தகுதியேற்படுத்தும் நாட்களில், பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும்.

    இதே போல் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைக்காத வாக்காளர்களும் இணைத்துக் கொள்ளலாம். சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் -2023-ன்படி வாக்காளர் பட்டியலில் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ளும் பணி நேற்று (9ம் தேதி) முதல் டிசம்பர் 8-ம் தேதி வரையிலும், வருகிற 12, 13, 26 மற்றும் 27ம் தேதிகளில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த முகாம்களில் நேரடியாக விண்ணப்பங்களை பெற்று அன்றே பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் வேடியப்பன், வட்டாட்சியர்கள் (தேர்தல்) ஜெய்சங்கர், சம்பத், நகராட்சி ஆணையர்(பொறுப்பு) சரவணன், கிழக்கு மாவட்ட திமுக துணை செயலாளர் கோவிந்தசாமி, தங்கராஜ், அதிமுக நகர செயலாளர் கேசவன், காங்கிரஸ் கட்சி நகர தலைவர் லலித்ஆண்டனி, பா.ஜ மேற்கு மாவட்ட பொதுச் செயலாளர் அன்பரசன், மாவட்ட தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சந்திரமோகன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர். 

    • வாக்காளர் பட்டியலை இன்று கலெக்டர் சாந்தி வெளியிட்டார்.
    • மாவட்டத்தில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 12,37,126.ஆண்கள் 6,25,692,பெண்கள் 6,11,258, 3-ம் பாலினத்தவர் 176.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஐந்து சட்டமன்றத் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை இன்று கலெக்டர் சாந்தி வெளியிட்டார். பின்னர் இது குறித்து அவர் தெரிவித்த போது தருமபுரி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் 6,25,692 ஆண்களும், 6,11,258 பெண்களும், 176 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 12,37,126 நபர்கள் வாக்காளர்களாக உள்ளனர்.

    மேலும் தருமபுரி மாவட்டத்தில் 1,485 வாக்குச் சாவடி நிலையங்கள் உள்ளன. 01.01.2023 தேதியை தகுதி நாளாகக் கொண்டு 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் மற்றும் 18 வயது நிறைவடைந்து இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காதவர்கள், மற்றும் 17 வயது பூர்த்தி அடைந்த இளம் வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரை சேர்த்துக்கொள்ளும் வகையில் வரும் 12.11.2022, 13.11.2022, 26.11.2022 மற்றும் 27.11.2022 தேதிகளில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.

    இந்த முகாம்களில், தகுதியான நபர்கள் அனைவரும் அருகில் உள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு சென்று, தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க படிவம் 6 வழங்கியும், ஏற்கனவே வாக்காளராக பதிவு செய்துள்ளவர்கள் முகவரி மாற்றம், பெயர் திருத்தம் அல்லது வேறு தொகுதிக்கு மாற்றச்செய்ய விரும்பினால், அதற்கு படிவம் 8-ஐ பூர்த்தி செய்தும், ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைத்திட படிவம் B-யை பூர்த்தி செய்தும், வாக்குச் சாவடி நிலை அலுவலர்களிடம் அந்தந்த வாக்குச் சாவடிகளில் வழங்கலாம்.

    மேலும், பொதுமக்கள் மேற்கண்ட வசதிகளை தங்கள் வீடுகளிலிருந்தே பெற www.nvsp.in என்ற இணையதள முகவரியில், Apply Online/Correction of entries என்ற லிங்க் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், செல்போனில் Voters Helpline App என்ற செயலியை பதிவிறக்கம் செய்தும் விண்ணப்பிக்கலாம். இது தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின், 1950 என்ற இலவச உதவி எண்ணை தொடர்பு கொண்டு, கூடுதல் விவரங்கள் பெறலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.

    சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்காளர்கள் விபரம் வருமாறு:-

    பாலக்கோடு- ஆண் வாக்காளர்கள் 1,18,950, பெண் வாக்காளர்கள் 1,16,541, 3-ம் பாலினத்தவர் 17.

    பென்னாகரம்-ஆண் வாக்காளர்கள் 1,25,465, பெண் வாக்காளர்கள் 1,17,213,3-ம் பாலினத்தவர் 10.

    தருமபுரி-ஆண் வாக்கா ளர்கள் 1,30,747,பெண் வாக்காளர்கள் 1,28,551,3-ம் பாலினத்தவர் 112.

    பாப்பிரெட்டிப்பட்டி-ஆண் வாக்காளர்கள் 1,28,322,பெண் வாக்கா ளர்கள் 1,27,603,3-ம் பாலினத்தவர் 13.

    அரூர்-ஆண் வாக்கா ளர்கள் ,22,168, பெண் வாக்காளர்கள் 1,21,650,3-ம் பாலினத்தவர் 24.

    மாவட்டத்தில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 12,37,126.ஆண்கள் 6,25,692,பெண்கள் 6,11,258, 3-ம் பாலினத்தவர் 176.

    • உறுப்பினர்ராமசாமி உடல்நலக்குறைவால் இறந்து விட்டதால் அப்பதவியிடம் காலியாக இருந்தது.
    • ஆண் 231, பெண் 236 என மொத்தம் 467 வாக்காளர்கள் உள்ளனர்.

    குடிமங்கலம்:

    தமிழக தேர்தல் ஆணையம், உள்ளாட்சிகளில் காலியாக உள்ள பதவியிடங்களுக்கு இடைத்தேர்தல் நடத்த முதற்கட்ட பணிகளை துவக்கியுள்ளது. அவ்வகையில், குடிமங்கலம் ஒன்றிய ஊராட்சிகளில் ஒரு வார்டு உறுப்பினர் பதவி மட்டும் காலியாக இருந்தது.குடிமங்கலம் ஊராட்சி 1வது வார்டு உறுப்பினர்ராமசாமி உடல்நலக்குறைவால் இறந்து விட்டதால் அப்பதவியிடம் காலியாக இருந்தது.காலியிடத்தை நிரப்புவதற்கான இடைத்தேர்தலை நடத்த முதற்கட்டமாக வரைவு வாக்காளர் பட்டியல்குடிமங்கலம் ஒன்றிய அலுவலகத்தில் வெளியிடப்பட்டது. பி.டி.ஓ., சிவகுருநாதன் பட்டியலை வெளியிடஅங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் பெற்றுக்கொண்டனர். வார்டு வரைவு வாக்காளர் பட்டியலில் ஆண் 231, பெண் 236 என மொத்தம் 467 வாக்காளர்கள் உள்ளனர்.

    ×